PAGEVIEWERS

TATA-மாநில பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் 08.04.2014 அன்று பள்ளி  கல்வி இயக்குனர் .மதிப்பு மிகு .ராமேஸ்வர முருகன் அவர்களுடன் சந்திப்பு 

1 ) புதுகோட்டை மாவட்டம் -கிள்ளு கோட்டை -அரசு உயர் நிலை பள்ளி த.ஆ அவர்கள் ஆசிரியர்களுக்கு மார்ச் 2014 மாத ஊதியம் பெற்று வழங்காதது குறித்தும் ,பிற நடவடிக்கை குறித்தும் பள்ளி கல்வி இயக்குனர் அவர்களிடம் புகார் தெரிவித்ததும் உடனடியாக CEO அவர்களை தொடர்புக் கொண்டு நடவடிக்கை எடுக்க ஆணையிட்டார்கள் .

2 )  பள்ளி கல்வி துறையில் வரலாறு ,ஆங்கிலம் பாட பிரிவுகளில் ஒரே  பாடத்தில் இளநிலை  , முதுநிலை பட்டம் படித்தவர்களை மட்டுமே  முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு பரிசீலனை செய்திட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது .

3 .) திருநெல்வேலி -DEEO அலுவலகத்தில் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணி புரியும் கண்காணிப்பாளர்     மற்றும் திருச்சி -  தா. பேட்டை  AEEO  அலுவலகத்தில் பணி புரியும் கண்காணிப்பாளர் அவர்களை பணி மாறுதல் செய்திட மனு கொடுக்கப்பட்டது .

No comments:

Post a Comment