PAGEVIEWERS

மாபெரும் விபத்து ! TATA பொது செயலாளர் கிப்சன்  உயிர் பிழைத்தது இறைவனின் கருணை மற்றும் பல ஆசிரியர்களின் பிரார்த்தனை

இன்று ( 10.11.2014 ) அதிகாலை 3.15 மணிக்கு திருச்சியில் இருந்து திருச்செந்தூர் சென்ற அரசு பேருந்தில் படிக்கு முன்பாக உள்ள இருக்கையில் நான்  அமர்ந்து திருவண்ணாமலை -செங்கம் -கூட்டத்தை முடித்து திருநெல்வேலி திரும்பிக்கொண்டு இருந்தேன் .மேற்படி பேருந்து துவரங் குறிச்சி அருகில்  உள்ள கைகாட்டி என்ற பகுதியில் வரும்போது நான் இருந்த பேருந்து முன்பாக சென்ற பேருந்து மீது மிக வேகமாக மோதியது அதில் நான் இருந்த இருக்கை முழுமையாக அப்பளம் போல் நொறுங்கியது .இரண்டு பேருந்திலும் பயணம் செய்த பலர் மிகுந்த காயங்களுடன் தப்பினார்கள் .ஆனால் நான் மட்டும் இறைவனின் கருணை மற்றும் பல ஆசிரியர்களின் பிரார்த்தனையால் எவ்வித ரத்த காயமும் இல்லாமல் காப்பாற்ற பட்டு உள்ளேன் .*(உன் பக்கத்தில் ஆயிரம் பெரும் உன் வலது பக்கத்தில் பதினாறாயிரம் பெரும் விழுந்தாலும் அது உன்னை அணுகாது .உன் கண்களால் மட்டும் காண்பாய் .உன்னை சேத படுத்தாது ) என்பது போல் சிறிய காயங்களுடன் காப்பாற்ற பட்டு உன்ளேன் .

அன்பார்ந்த ஆசிரியர்களே உங்களின் தனி பிராத்தனையில் இரவு பகல் பாராமல் இயக்க பணி செய்திட அடியேனுக்கு உடல் பலம் ,மன பலம் பாதுகாப்பு கிடைத்திட பிராத்திக்க வேண்டுகிறேன்

நான் இருந்த இருக்கை எந்த அளவுக்கு சேதமாகி உள்ளது என்பதற்கான புகைப்படங்கள் ..





No comments:

Post a Comment