PAGEVIEWERS

TATA-சங்கத்தின் ஊதிய வழக்கு மேல் முறையீடு -கூட்டம் 

 நாள் ;- 28.12.2014, நேரம் ;-காலை 11.00 மணி

இடம் ;TDTA துவக்க பள்ளி .புளியங்குடி -திருநெல்வேலி மாவட்டம் -

அனைவரும் சங்கம் பாகுபாடு இல்லாமல் கலந்து கொள்ளவும் 
தொடர்புக்கு ;- சாமுவேல் ஆசிரியர் -7418720158

ஆசிரியனுக்கு எதிரி ஆசிரியனே...
ஒரு போக்குவரத்து ஊழியருக்கு ஒரு பிரச்சனை என்றால், அனைத்து ஊழியரும் ஒன்றுபட்டு போராட்டம் நடத்துகின்றனர். மருத்துவ துறையிலும் இதே ஒற்றுமை தான். மற்ற எல்லா துறையிலும் இதே ஒற்றுமை காண முடியும்.
ஆனால் இந்த கல்வித்துறையில் மட்டும் ஒருவரை ஒருவர் காலை வாரிவிடுவதும், பொறாமை, ஈகோ இப்படி எல்லா கெட்ட எண்ணங்களும் தாண்டவமாடுகிறது.
ஆதிகாலத்தில் டைனோசர் என்ற மிருகம் வாழ்ந்ததாக நாம் படிக்கிறோம். அவைகள் தங்களை தாங்களே அழித்து கொண்டது போல தான், நம் நிலைமை இன்றுள்ளது.
கிராமம், எண்ணிக்கை காரணம் காட்டி இன்றைக்கு இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தில் கை வைத்தது போல, நாளை அதே கிராமத்தில் பணிபுரியும் பட்டாதாரி, த.ஆ, மு.ப.ஆ, போன்றவர்களுக்கு இந்த பாதிப்பு வராதா? பக்கத்து வீட்டுக் கூரையில் தான் தீ என்று நிம்மதி அடையும் என் ஆசிரிய சமூகமே, அந்த தீயிலிருந்து ஒரு பொறி தங்கள் கூரையில் விழுந்தால் என்ன ஆகுமென்று சிந்தியுங்கள்!
தமிழகத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்கள் சங்கங்களையும் ஒருங்கிணைத்து வலுவான போராட்ட களத்தை உருவாக்கிட அனைத்து ஆசிரியர்கள் சங்கங்களுக்கும்  TATA சங்கம் சார்பாக அனுப்பப் பட்டுள்ள கடிதம் .



இடைநிலை ஆசிரியர் ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்; பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை 

இடைநிலை ஆசிரியர்களுக்காய் குரல் கொடுத்த ஐயா இராமதாசு அவர்களுக்கு மாநில அமைப்பு சார்பாக நன்றிகள்

மத்திய அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்ற தமிழக அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருந்த போதிலும், அவர்களின் கோரிக்கையை ஏற்க தமிழக அரசு மறுத்துவிட்டது. இக்கோரிக்கை நியாயமற்றது; சாத்தியமற்றது என அரசு கூறியுள்ளது.

ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்ட போது, தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட புதிய ஊதிய விகிதம் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. ஊதிய விகிதத்தை மாற்றியமைப்பதில் நிகழ்ந்த குளறுபடிகள் காரணமாக அவர்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதியத்தில் ரூ.360 இழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. அதுமட்டுமின்றி, அவர்களது பணி நிலையில் உள்ள மத்திய அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தைவிட தங்களுக்கு சுமார் ரூ.4800 குறைவாக நிர்ணயிக்கப் பட்டு இருப்பதாகவும், இக்குறைபாட்டை களையும் வகையில் மத்திய அரசு இடைநிலை ஆசிரியருக்கு இணையாக தங்களுக்கும் ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் என்றும் இடைநிலை ஆசிரியர்கள் கோரினர்.
 
இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து பரிசீலிக்க 2010 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஒருநபர் ஆணையம், அவர்களுக்கு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட ஊதிய விகிதத்துடன் ரூ.750 சிறப்பு ஊதியம் சேர்த்து வழங்க ஆணையிட்டது. இதன்மூலம் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் ரூ.1553 கூடுதலாக கிடைக்கும். ஆனால், இது போதுமானதல்ல என்று கூறி தொடரப்பட்ட வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை கனிவுடன் ஆய்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது. ஆனால், ஆசிரியர்கள் கோரிக்கையில் உள்ள நியாயத்தை கருத்தில் கொள்ளாமலேயே அதை தமிழக அரசு நிராகரித்துள்ளது.
இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிராகரிப்பதற்காக தமிழக அரசு தெரிவித்துள்ள காரணங்கள் எதுவும் ஏற்கத்தக்கதல்ல. மத்திய அரசுக்கு சொந்தமான கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நகர்ப்புறங்களில் இருப்பதால் அதில் பணியாற்றும் ஆசிரியர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதால் அவர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்படுகிறது; ஆனால், தமிழக அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள் கிராமங்களில் பணியாற்றுவதால் எந்த சிரமமும் இல்லை என்பதால் அவர்களுக்கு அதிக ஊதியம் வழங்கத் தேவையில்லை என்று தமிழக அரசின் தரப்பில் கூறப்பட்டுள்ள காரணம் நகைப்புக்குரியது.
 
நகரங்களில் பணியாற்றுவதை விட கிராமப்புறங்களில் பணியாற்றுவதில் தான் சிரமங்கள் அதிகம் என்பதும், மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்களுக்கு கிராமப்பகுதிகளில் பணியாற்ற கூடுதல் ஊதியம் வழங்கப்படுவதும் அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமின்றி, நகர்ப்புறங்களில் உள்ள கேந்திரிய வித்யாலயாக்களில் பயிலும் ஒப்பீட்டளவில் முன்னேறிய மாணவர்களுக்கு கற்பிப்பதைவிட, எந்த வசதியும் இல்லாத கிராமப்புற மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு தான் அதிக முயற்சியும், உழைப்பும் தேவைப்படும். இதையெல்லாம் உணராமல் கிராமப்புறங்களில் பணியாற்றுவதால் தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அதிக ஊதியம் தரத் தேவையில்லை என்ற அரசின் வாதம் கேலிக்குரியது என்பது மட்டுமின்றி, கிராமப்புறங்களை அரசு இரண்டாம் தரமாக பார்க்கிறது என்பதற்கும் சிறந்த உதாரணமாகும். ஒருவேளை வாதத்திற்காக கிராமப்புற பள்ளிகளில் பணியாற்றுவதில் சிரமம் இல்லை என்று வைத்துக் கொண்டால் கூட, இந்தியாவிலேயே அதிக அளவில் நகரமயமாக்கப்பட்ட மாநிலமான தமிழ்நாட்டில் 50%-க்கும் அதிகமான இடைநிலை ஆசிரியர்கள் நகரப்பகுதிகளில் பணியாற்றி வரும் நிலையில், அவர்களுக்கும் இதே காரணத்தைக் கூறி அதிக ஊதியத்தை மறுப்பது எந்த வகையில் நியாயம்?
 
கேந்திரிய வித்யாலயா ஆசிரியர்களுக்கு கல்வித் தகுதி அதிகம்; மாநில அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு கல்வித் தகுதி குறைவு என்பதும் தவறான வாதமாகும். கேந்திரிய வித்யாலயாக்களின் ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் கற்பிக்கின்றனர்; தமிழக அரசு ஆசிரியர்கள் தமிழில் பயிற்றுவிக்கிறார்கள் என்று கூறுவதையும் ஏற்க முடியாது. தமிழக அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப் பட்டுவிட்டன என்பது ஒருபுறமிருக்க, ஆங்கிலத்தில் கற்பிப்பதை விட தமிழில் பயிற்றுவிப்பது தகுதி குறைவானது என்று தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட அரசே கூறுவதை சகிக்க முடியவில்லை. தமிழை இதைவிட அவமதிக்கமுடியாது. அதேபோல் கேந்திரிய வித்யாலயாக்களில் மொத்தம் 1017 இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமே இருப்பதால் அவர்களுக்கு அதிக ஊதியம் தரலாம்; ஆனால், தமிழக அரசு பள்ளிகளில் 1.16 லட்சம் இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதால் அவர்களுக்கு தர முடியாது என்று என்று அரசு அளித்துள்ள விளக்கத்தை எந்த வகையில் சேர்த்துக் கொள்வது என்று தெரியவில்லை.
 
எதிர்காலத் தலைமுறையினரை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிப்பது தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தான். இதை உணர்ந்து மத்திய அரசு பள்ளிகளின் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் தேவை என்ற அவர்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

பள்ளிக்கல்வி - 01.01.2015 நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவிக்கு பதவி உயர்வு மூலம் நியமனம் செய்யத் தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயார் செய்தல் சார்ந்து - இயக்குநர் செயல்முறைகள்

CLICK HERE - DSE - PREPARATION OF HIGH SCHOOL HM PROMOTIONAL PANEL AS ON 01/01/2015 - REG PROC

 

ஆசிரியர் தேர்வு வாரியம் - கணினி பயிற்றுநர்களுக்கான பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்புதல் சார்ந்த தேர்வு நடத்துதல் மற்றும் சான்றிதழ் சரிப்பார்ப்புகான ஆய்வு கூட்டம், 26.12.2014 அன்று சென்னையில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கலந்துகொள்ள இயக்குனர் உத்தரவு

ஆசிரியர் தேர்வு வாரியம் - கணினி பயிற்றுநர்களுக்கான பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்புதல் சார்ந்த தேர்வு நடத்துதல் மற்றும் சான்றிதழ் சரிப்பார்ப்புகான ஆய்வு கூட்டம், 26.12.2014 அன்று சென்னையில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கலந்துகொள்ள இயக்குனர் உத்தரவு...

 

தொடக்கக் கல்வி - பள்ளி மாணவர்கள் மனச்சிதைவு காரணமாக தற்கொலை செய்து கொண்டவர்களின் விவரம் கோரி உத்தரவு

புதுகோட்டை மாவட்டம் -கிள்ளுகோட்டை அரசு மேல்நிலை பள்ளியில் -நிதி முறைகேடு-நடவடிக்கை எடுக்க வேண்டி மாநில அமைப்பு சார்பாக CEO அலுவலகம் முன்பு போராட்டம்

புதுகோட்டை மாவட்டம் -கிள்ளுகோட்டை அரசு மேல்நிலை பள்ளியில் -நிதி முறைகேடு - போராடிய  -TATA -மாவட்ட பொறுப்பாளர்கள் -திரு.யோவேல் ,திரு.ராஜேஷ் ஆகியோர்கள் - தலைமை ஆரிசியர்களின் தூண்டுதலால் ஊர் மக்கள் மற்றும் முறைகேடுகளுக்கு உதவி வரும் சில ஆசிரியர்களால் தாக்கி சிறைப்பிடிக்க பட்டனர்  மேலும் நமது பொறுப்பாளர்கள் மீது இரவு காவலர் தமிழ் செல்வி முலம் காவல் துறையிலும் புகார் கொடுத்து உள்ளார்கள்( இரவு காவலருக்கு பகலில் பள்ளியில் என்ன வேலையோ ?) .இது குறித்து புகார் தெரிவித்தும் கல்வித் துறை ஊழல் ஆசிரியர்களை யும்   தலைமை ஆரிசியரையும் காப்பாற்றும் விதமாக நடந்து வருவதை கண்டித்து விரைவில் மாநில அமைப்பு சார்பாக CEO அலுவலகம் முன்பு போராட்டம் நடை பெறும் .

பி.எட் .,எம் .எட் -2 வருடங்களாக உயர்வு- NCTE -ன் NOTIFICATION கடிதம்

CLICK HERE-NCTE -NOTIFICATION LETTER

TATA -சங்கத்தின் உண்ணா நிலை அற போராட்டத்தில் கலந்து கொள்கிறவர்கள் தங்கள் விபரங்களை Facebook ல் பதிவு செய்யுங்கள் .அது நமக்கு வலு சேர்க்கும் ....

TATA -சங்கத்தின் உண்ணா நிலை அற போராட்டம் 11.01.2015 ல் இருந்து 01.02.2015 க்கு மாற்றம் --
11.01.2015அன்று இடைநிலை ஆசிரியருக்கு ஊதிய மாற்றம் செய்ய மறுத்த நிதித்துறையை கண்டித்தும் தமிழக அரசு கடிதம் எண் 60473 / CMPC / 2014. நாள் ;10.12.2014 . அய் ரத்து செய்திட வேண்டியும் உண்ணா நிலை அற போராட்டம்சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு நடத்திட திட்டமிட பட்டு இருந்தது .மேற்படி பொங்கல் பண்டிகை காலத்தை ஒட்டி வருவதால் அனுமதி கிடைப்பதில் ஏற்படுகிற சிரமங்களை முன்னிட்டும் மேலும் ஆசிரியர்களை சந்தித்து போராட்டத்திற்கு ஆயத்த படுத்திட கால அவகாசம் தேவை படுவதாலும் மேற்படி TATA -சங்கத்தின் உண்ணா நிலை அற போராட்டம் 11.01.2015 ல் இருந்து 01.02.2015 க்கு மாற்றம் செய்யப்படுகிறது என அறிவிக்கிறோம் -

ஆசிரியர் தகுதித் தேர்வை ஆண்டுதோறும் நடத்த வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள், உள்ளாட்சி அமைப்பு பள்ளிகளில் ஏற்படும் காலியிடங்களை நிரப்ப, அதிக அளவில் ஆசிரியர் தகுதி தேர்வை நடத்த வேண்டும்' என, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், கீழப்பாவூரைச் சேர்ந்த, எம்.சித்ரா என்பவர், தாக்கல் செய்த மனு:கீழப்பாவூர் அருகில் உள்ள மடத்துாரில், இந்து நடுநிலைப் பள்ளி உள்ளது. இது, அரசு உதவி பெறும் பள்ளி. கடந்த, 2012
ஏப்ரலில், ஆசிரியராக நியமிக்கப்பட்டு, பணியாற்றி வருகிறேன்.
வேலூர் மாவட்டம், திமிரி வட்டாரம் TATA கிளை
20/12/14 சனி மாலை 5 மணிக்கு திமிரி, கோட்டை ஆண்கள் தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு பற்றிய விளக்கக் கூட்டம் நடைபெற்றது. வேலூர் மாவட்ட தலைவர் திரு.இளையராஜா மற்றும் மாவட்ட செயலாளர் திரு.விஜய்குமார் முன்னிலை வகிக்க, வடமேற்கு மண்டல செயலாளர் திரு.நந்தகுமார் மற்றும் மண்டல தலைவர் சம்பத் கூட்டத்தில் கலந்துகொண்டனர். மேலும் நெமிலி வட்டார தலைவர் திரு.புருசோத்தமன் பொருளாளர் திரு.கோபிநாத் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்ட முடிவில் வட்டாரக்கிளை பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநில அமைப்பின் ஒப்புதலுடன் அறிவிக்கப்பட்டனர். அனைத்து பொறுப்பாளர்களுக்கும் மாநிலத்தலைவர் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.
திமிரி வட்டாரக்கிளை
தலைவர்: திரு. க.துரை
செயலாளர்: திரு க.சதிஷ்குமார்
பொருளாளர்: திரு. க.ஞானசேகரன்
மாவட்ட அமைப்பு செயலாளர்:
ச.தமிழ்ச்செல்வன். அனைவருக்கும், மாநில அமைப்பு மற்றும் மண்டலத்தின் வாழ்த்துக்கள்.

புதியதாக தலைமையாசிரியர் நியமிக்கும்வரை பள்ளியின் மூத்த ஆசிரியர் பள்ளியை நடத்திடுதல் சார்பு-தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை


புதியதாக தலைமையாசிரியர் நியமிக்கும்வரை பள்ளியின் மூத்த ஆசிரியர் பள்ளியை நடத்திடுதல்

TATA -சங்கத்தின் உண்ணா நிலை அற போராட்டம் 11.01.2015 ல் இருந்து 01.02.2015 க்கு மாற்றம் --



11.01.2015அன்று இடைநிலை ஆசிரியருக்கு ஊதிய மாற்றம் செய்ய மறுத்த நிதித்துறையை கண்டித்தும் தமிழக அரசு கடிதம் எண் 60473 / CMPC / 2014. நாள் ;10.12.2014 . அய் ரத்து செய்திட வேண்டியும்  உண்ணா நிலை அற போராட்டம்சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை  முன்பு நடத்திட திட்டமிட பட்டு இருந்தது .மேற்படி பொங்கல் பண்டிகை காலத்தை ஒட்டி வருவதால் அனுமதி கிடைப்பதில் ஏற்படுகிற சிரமங்களை முன்னிட்டும் மேலும் ஆசிரியர்களை சந்தித்து போராட்டத்திற்கு ஆயத்த படுத்திட கால அவகாசம் தேவை படுவதாலும் மேற்படி TATA -சங்கத்தின் உண்ணா நிலை அற போராட்டம் 11.01.2015 ல் இருந்து 01.02.2015 க்கு மாற்றம் செய்யப்படுகிறது என அறிவிக்கிறோம் -
  TATA-மாநில அமைப்பு 

REPUBLIC DAY - 2015










தமிழ்நாடு அமைச்சுப் பணி - பிரிவு கண்காணிப்பாளர்களுக்கான பணி மாறுதல் (வ.எண்.1 முதல் 74 வரை) கலந்தாய்வு 20.12.2014 அன்றும் இருக்கைப் பணி கண்காணிப்பாளர் பதவி உயர்விற்கு தகுதி வாய்ந்த உதவியாளர்களுக்கு தேர்ந்தோர் பட்டியலில் (வ.எண். 1 முதல் 80 வரை) உள்ளவர்களுக்கு 21.12.2014 அன்றும் சென்னை, பெற்றோர் ஆசிரியர் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.

DSE - SECTION SUPERINTENDENT TRANSFER & ASSISTANT TO DESK SUPERINTENDENT PROMOTIONAL COUNSELING REG PROC CLICK HERE...

 பள்ளிக்கல்வி - 2014-15ம் கல்வியாண்டில் தொகுப்பூதிய அடிப்படையில் கணினி பயிற்றுநர்களை நியமித்துக் கொள்ள அனுமதித்து வழங்கப்பட்ட அரசாணையை இரத்து செய்து உத்தரவு

இளைஞர்களை ஏளனம் செய்யும் பிற சங்கங்களுக்கு பதிலடி கொடுப்போம்,,,,போராடத்தெரியாதவர்கள் அல்ல நாம் என காட்டுவோம்,,,
இனியும் ஏமாறாதேஇடைநிலை ஆசிரியர் பேரினமே,,,
,இன்னும் யார் உனக்காக போராடுவார்கள் ? என காத்திருக்கிறாய் உனக்காக நீதான் போராட வேண்டும்.நம் முன்னோர்களின் சங்கங்கள் நமக்காக ஒரு அடிமை (இடைநிலை ஆசிரியர்கள்) கூட்டம் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் எப்படி உன் ஊதிய பிரச்சனையை தீர்க்க முன் வருவார்கள்? 2006 ல் நமக்கான ஊதியம் இதுதான் எனத்தெரிந்தபோதில் இருந்து இதோ 8 ஆண்டுகள் ஆகியும் உன் துயரத்தை போக்காதவர்கள் இனியும் உன்னை யோசிப்பார்களா? ஒருவேளை அப்படி செய்தால் அதன் உள்நோக்கம் நாம் குரல் கொடுக்காமல் இருந்தால் இடைநிலை ஆசிரியர்கள் கூட்டம் டாடா வை நோக்கி சென்று விடுவார்களோ ? என்ற அச்சத்தினால்தானேயொழிய நிச்சயம் உன் மேல் உள்ள அக்கறையால் அல்ல.இன்று போராட்டங்களை அறிவிக்கும் இவர்கள் 8 ஆண்டுகளாய் எங்கிருந்தனர்.
இடைநிலை ஆசிரியர்கள் கூட்டம் இப்போது டாடாவை நோக்கி செல்வதாலேயாதான் இந்த அறிவிப்புகள்.
இதை நம்பி இன்னும் அவர்களின் கேடயமாக செயல்படாமல் போர்வீரனாக எழுந்து வா ,,ஒரு பக்கம் சட்ட போராட்டத்தை பார்த்துக்கொள்ள நம் அனுபவமிக்க மாநில தலைவர் கார்த்திகேயன் மற்றும் கிப்சன் இருக்கிறார்,,,களப் போராட்டத்தில் ஒரு கை பார்க்க இளைஞர் பட்டாளமே எழுந்து வா உண்ணாவிரத களத்திற்கு,,,நாளை நமதே,,, 4200 ம் நமதே,,,

பள்ளிக்கல்வித்துறையில் விசுவரூபம் எடுக்கும் 3 ஆயிரம் டிரான்ஸ்பர் விவகாரம்!-vikatan.om



தமிழகத்தில் தொடக்க பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை 55 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் சுமார் ஓரு கோடியே 30 லட்சம் மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றனர். இவற்றில் மொத்தம் 3 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவற்றையெல்லாம் நிர்வகிப்பது பள்ளிக்கல்வித்துறையும், அதில் உள்ள தொடக்க கல்வித்துறை, மெட்ரிக் கல்வி இயக்குனரகம் உள்பட பிற துறைகள்தான்.
* பவர்புல் இயக்குனர் பதவி & பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பதவி
பள்ளிக்கல்வித்துறையில் தொடக்க கல்வித்துறை, அரசு தேர்வுத்துறை, ஆசிரியர் பயிற்சி கல்வி இயக்குனரகம், பொது நூலகத்துறை என்று 8 இயக்குனரகங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பதவிதான் பவர்புல்லானது. ஆசிரியர்கள் டிரான்ஸ்பர், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்குவது, முதன்மை கல்வி அலுவலர்களை நிர்வகிப்பது என்று பல முக்கிய பணிகள் பள்ளிக்கல்வி இயக்குனரகத்தை சார்ந்தது.

ஊதிய வழக்கு உடனடியாக நீதி மன்றத்தில் அப்பில் வழக்கறிஞர்  சந்திப்பு 16.12.2014 

16.12.2014 அன்று இரவு 8.00 மணி அளவில் நமது மூத்த வழக்கறிஞர் திரு.அஜ்மல்கான் மற்றும் திரு.வெங்கடேசன் அவர்களை மதுரையில் அவரது இல்லத்தில் சந்தித்து மேல் முறையீட்டு வழக்கு தாக்கல் செய்திட அனைத்து ஆவணங்களை ஒப்படைத்தோம் .வழக்கறிஞர்க்கான தொகை கொடுத்ததும் நீதி மன்ற விடுமுறை காலம் முடிந்ததும் வழக்கு வரும் ஜனவரி மாதம்  நீதி மன்றத்தில் அப்பில்செய்யப்படும் இதற்கு தங்களின் ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும் .வழக்கு நீதி மன்றத்தில் அப்பில்செய்யப் படுவதற்கான அபிடவிட் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது .நம்மால் முடியும் .நிச்சயமாக டாட்டா 9300+4200 கண்டிப்பாக பெற்று தரும் அது வரை துங்காமல் செயல் படும் .

இடைநிலை ஆசிரியர் சொந்தங்களே பொறுத்தது போதும் பொங்கி எழுங்கள் !!!!

டாட்டா வின் ஊதிய வழக்கு படி இடைநிலை ஆசிரியர் ஊதியம் 9300 + 4200 என மாற்றம் செய்திட முடியாது என தமிழக அரசு கடிதம் எண் 60473 / CMPC / 2014. நாள் ;10.12.2014 அறிவித்து உள்ளதை பல ஆசிரியர்கள் சந்தோஷ செய்தியாக பதிவிட்டு வருகிறார்கள் , இது இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிக்கப்பட்ட சாவு மணியாகும் .இதை கொண்டாடுபவர்களுக்கு பாடம் புகட்டிடவும் நமது எதிர்ப்பை அரசுக்கு தெரிவிக்கவும் வரும் ஜனவரி 11 ல் சென்னையில்  நடை பெரும் மாபெரும் உண்ணாவிரதம் நிகழ்வுக்கு சங்கம் பாகு பாடு இல்லாமல் அனைவரும்கலந்து கொண்டு நமது எதிர்ப்பை பதிவு செய்திடுவோம் -

14.12.2014 அன்று திருச்சியில் TATA பொதுக்குழு.கூடடத்தின் முடிவு மற்றும் தீர்மானம் ..


11.01.2015 அன்று சென்னை மாபெரும் உண்ணாவிரதம் நீதிமன்றத்தில் அப்பில் வழக்கு ஜனவரி 6 ல் தாக்கல் செய்யப்படும்.

கோரிக்கைகள் ;-

1.இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு தீர்க்கப்பட்டு 9300 + 4200 வழங்கிட வேண்டும் ,மேலும் அரசு கடிதம் ; 60473 / CMPC / 2014 நாள் ; 10.12.2014. ரத்து செய்திட வேண்டும் .

2.இந்திய அரசு கெஜெட்டில் 19.9.13 அன்று தான் CPS சட்டம் வெளியிடப்பட்டு உள்ளது .தமிழகத்தில் CPS சட்டம் இன்று வரை அமுல் படுத்த படாமல் மேற்படி திட்டம் நடை முறை படுத்த படுகிறது .எனவே CPS திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வுதிய திட்டம் நடைமுறை படுத்திட வேண்டும் 

ஊதிய வழக்கு உடனடியாக நீதி மன்றத்தில் அப்பில் செய்யப்படுகிறது 

அப்பில் வழக்கு செலவு மற்றும் உண்ணாவிரதம் ஆகியவற்றிற்கு ஆகும் செலவு ரூ  1,45,000

14.12.2014 அன்று திருச்சியில் TATA பொதுக்குழுவில்  நிதி வரவு 

1.திருச்சி மாவட்டம்       ரூ.10,000

2.புதுகோட்டை -அன்ன வாசல் ஒன்றியம்  ரூ.7000

3.விழுப்புரம் -திரு வெண்ணை நல்லூர் -3000

4.தருமபுரி மாவட்டம் -   2500

5.திருநெல்வேலி சசி குமார் ரூ.500

 அன்பு தோழர்களே அப்பில் வழக்கு செலவு மற்றும் உண்ணாவிரதம் ஆகியவற்றிற்கு ஆகும் செலவுகளை சந்தியுங்கள் உங்கள் பங்களிப்பை கீழ் கண்ட முகவரிக்கு மணி ஆடர் மூலமாகவே அல்லது கீழ் கண்டவங்கி கணக்கில் செலுத்தி அதன் விபரத்தை 9443464081 என்ற எண்ணிற்கு SMS அனுப்புங்கள் 

 

C.KIPSON 

235.NORTH STREET

PARAPPADI 627110

NELLAI - DIST

E-mail ; kipson76@yahoo.in

A/NO ; 30486085987

SBI-AMBAI-NELLAI DIST,

Tirunelveli

Branch :
Ambasamundram

IFSC Code :
SBIN0000804 (5th character is zero)

MICR Code :

Branch Code :
000804.










                        மிகுந்த வேதனையுடன் இ.ஆ
´°°`´°°`´°°`´°°`´°°`´°°`´°°`´°°`´°°`´°°`

இன்னும் பேரியக்கங்கள் என சொல்லிக்கொள்ளும் சங்கங்கள் தங்கள் நீ பெரிதா? நான் பெரிதா? என்ற ஈகோவினால் தனித்தனியாக போராட்டம் என அறிவிக்கின்றன. இதனால் பாதிக்கப்படுவது சங்கத்தலைமை அல்ல. இடைநிலை ஆசிரியர்களாகிய நாமும் (100000) நமது குடும்பங்களும் தான். இதனால் பெயர் சம்பாதிக்கப்போவது ( நான்தான் போராடினேன்) சங்கமே. எனவே தமிழகத்தில் உள்ள 48 ஆசிரியர் சங்கங்களும், 100000 ஆசிரியர்களும், அவர்களது குடும்பத்தினரும் சேர்ந்து களத்தில் இறங்கிப் போராட வேண்டும். பிரிந்து கிடந்து சாதிக்கப் போவது ஒன்றும் இல்லை.

சோர்ந்து போக வேண்டாம் நண்பர்களே... திரு.தாமஸ் ராக்லேண்ட், TATA துணை பொது செயலாளர் , திருச்சி

இக்கடிதம் ஆச்சரியத்தையும் வேதனையையும் கொடுத்துள்ளது. ஆனால் நம் நம்பிக்கை மட்டும் குறையவில்லை. இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை களைய கோரியே TATA சார்பில் மனு அளிக்கப்பட்டது. மனு பரிசீலிக்கப்படாததால் நீதிமன்றம் சென்று நீதிமன்றம் மனுவை எட்டுவார காலத்திற்குள் பரிசீலிக்க உத்தரவிட்டது. எனவே தற்போது மனுவை பரிசீலித்து, ஏற்கனவே ஒரு நபர் குழுவும், ஊதிய குறை தீர்க்கும் பிரிவும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 9300- 34800 +4200 வழங்க இயலாததற்கு
என்னென்ன காரணங்களை கூறினார்களோ அதனையே இப்போது இந்த கடிதத்தில் கூறி கோரிக்கையினை நிராகரித்திருப்பது வேதனையும் ஆச்சரியமுமே. அடுத்தகட்ட முயற்சியாக TATA இதனை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும். இடைநிலை ஆசிரியர்களில் 01.06.2009 - க்குப்பின்னர்,  அதாவது ஆறாவது ஊதிய குழு நடைமுறைக்கு வந்த பின்னர் பணியில் சேர்ந்தவர்களோடு ஆறாவது ஊதிய குழு ஊதியத்தை ஒப்பிடுகையில், இந்த ஊதிய குழு நடைமுறைக்கு வராமல் இருந்திருந்தால் கூடுதல் ஊதியம் தற்போது பெற்றுகொண்டிருக்க இயலும். உதாரணத்திற்க்காக ஒன்றை குறிப்பிட்டுள்ளேன் .  இதனை யாராலும் மறுக்க இயலாது. இதனை இதற்கு முன்னர் பல்வேறு சமயங்களில் ஆசிரிய நண்பர்களுக்கு விளக்கி கட்டுரை வெளியிட்டுள்ளோம். வேதனைகளை விமர்சனங்களாக்க  விரும்பவில்லை. அதில் உடன்பாடும் இல்லை. தகுதியான ஆதாரங்களை TATA வைத்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் நாம் இருக்கிறோம். பொறுமையுடன் காத்திருங்கள். நீதிமன்றம் செல்வோம் நிச்சயம் வெல்வோம்.

ஊதியப் பிரிவு - தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்-ஊதியம் 9300 + 4200 வழங்கிட தமிழக அரசு மறுத்துள்ளதை அடுத்து டாட்டா விரைவில் - நீதிமன்றத்தில் அப்பீல் -

மணம் தளர வேண்டாம் ! நிச்சயம் ஊதிய மாற்றத்தை பெற்று தரும் -தொடர்ந்து டாட்டா வுடன் இணைந்து இருங்கள் .

மீண்டும் தமிழக அரசு ஒரு நபர் குழு  திரு.ராஜீவ் ரஞ்சன் இ ஆ ப அறிக்கை மற்றும் ஊதிய குறைதீர்க்கும் பிரிவு திரு.கிருஷ்ணன்  இ ஆ ப அறிக்கை உண்மையானது என்றும் டிப்பமோ கல்வி தகுதிக்கு ஏற்ப ஊதியம் கோர முடியாது எனவும் மேலும் அரசுக்கு ரூ 600 கோடி வருட நிதி செலவு ஏற்படும் என காரணம் கூறி மறுத்து உள்ளார்கள் 

இதை எதிர்த்து நமது சங்கம் மீண்டும் உடனடியாக நீதிமன்றத்தில் அப்பீல் செய்திட உள்ளது .நமது ஊரிமையை தற்போது விட்டு விட்டல் நம் எதிர் காலம் அவ்வளவு தான் .இனியும் இடைநிலை ஆசிரியர் சமுகம் ஊணர்வடையா விட்டல் அடுத்த ஊதிய குழுவில் நாம் அழிந்து விடுவோம் .இனிமேல் தான் நாம் அனைவரும் நம் சங்கத்திடம் உள்ள ஆவணங்களின் படி ஊரிமையை நிலை நாட்டிட மணம் தளராமல் மிக வேகமாக போராட வேண்டும் 

-டாட்டா கிப்சன் 

 

ஊதியப் பிரிவு - தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்க கோரி பெற நீதிமன்ற வழிக்காட்டுதல்கள் பரிசீலித்து மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க இயலாதென தமிழக அரசு மனுவை நிராகரித்துள்ளது.

தொடக்கக் கல்வி - நீதிமன்ற வழக்குகளின் மீது மேற்கொள்ளப்பட வேண்டிய துரித நடவடிக்கைகள் சார்ந்து இயக்குனரின் அறிவுரைகள்

DEE - ALL AEEO & SUPERINTENDENTs MEETING REG COURT CASES REG INSTRUCTIONS CLICK HERE...

பள்ளிக்கல்வி - நிர்வாகம் - பள்ளிக்கல்வித்துறையில் சார்ந்த இணை இயக்குனர்களுக்கு 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு பொதுத் தேர்வு பணிகள் சார்ந்த அறிவுரைகள் வழங்கி இயக்குனர் உத்தரவு

தொடக்கக் கல்வி-ஆசிரியர் வருங்கால வைப்பு நிதி தணிக்கை-26.12.2014க்குள் கண்டிப்பாக முடிக்கப்பட வேண்டும்-பள்ளிகல்வித்துறை அரசு முதன்மைச் செயலாளர்.
அரசுப் பணி தொய்வு ஏற்படக் காரணமாக இருந்த, அரசு பணியாளர் நன்னடத்தை விதிகளை மீறிய உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு மெமோ!!




 
CPS-திட்டம் -நமது பணம் விரைவில் பங்கு சந்தையில் முதலிடு -தமிழக அரசு -நிதித்துறை -கோப்புகள் பரிசிலனையில் உள்ளாவதாக தகவல் -போராட தயார் ஆவீர்.டாட்டா வுடன் .



நாமக்கல் மாவட்டம் -பள்ளி பாளையம் ஒன்றிய ஆசிரியர்கள் நமது ஊதிய வழக்கிற்காக நிதி கொடுத்துள்ளார்கள் அவர்களுக்கு நன்றி


14.12.2014 அன்று திருச்சியில் TATA பொதுக்குழு. பிற்பகல் 2.00 மணி

இடம் ;- ரவி மினி ஹால் .-
சத்திரம் பேருந்து நிலையம்
( கலைஞர் அறிவாலையம்  அருகில் ) -திருச்சி 


( இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கின்  தீர்ப்பு படி டிப்பமோ கல்வி  தகுதிக்கு ஏற்ப ஊதியம் 9300+ 4200  வழங்கிட வேண்டி ஒரே ஒரு கோரிக்கை யை  முன் நிறுத்தி டாட்டா மாநில அமைப்பு சார்பில் ''சென்னையில் மாபெரும் ஊண்ணா நிலை  அறப்போர் ''விடுமுறை காலம் முடிந்ததும் வரும் 2015 ஜனவரி மாதம் இறுதியில்  நடத்துவது குறித்து முடிவெடுக்க ஊள்ளோம்.go  வந்தால் போராட்டம் கைவிடப்படும்  )

1. உறுப்பினர்களின் விவரம்.
2. Cps book, dairy and calendar தேவைபட்டியலுடன் மாவட்டம் சார்பாக முன்பணம் ரூ.5000/-
3. அனைத்து பொறுப்பாளர்களின் முகவரி(பள்ளி&வீடு) மற்றும் தொடர்பு எண்.
போன்ற விவரங்களுடன் அனைத்து பொறுப்பாளர்களும் பங்கேற்க அழைக்கிறோம்.
மாநில அமைப்பு
அன்பு தோழர்களே    நீங்கள் இடைநிலை ஆசிரியர் என்ற ஒரே காரணத்திற்காய் பாதிக்கப்பட்டு உள்ளீர்களா ?.மேலும் டாட்டா சங்கத்தின் குழுவில் இணைய விரும்புகிரீர்களா ? டாட்டா சங்கத்தின் SMS தேவையா ? '' வாட்ஸ் அப் '' செய்தி தேவையா ?
  உங்கள் பெயர் மாவட்டம் தொடர்பு எண்ணை பதிவு செய்யவும்...
kipsontata   ல்

இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு ! வழக்கு எண் ;33399/13 முடிவு மிக மிக விரைவில்



நாம் விரும்பியது போல் 9300 + 4200 என நிர்ணயம் செய்து விரைவில் ( மிக மிக குறுகிய காலத்தில் ) அரசு ஆணை வெளியிட நிதித்துறை தீவிரம் 

நமது ஊதிய வழக்கின் காலக்கெடு 10.12.2014 அன்றோடு முடிவடைவதை ஒட்டி நமது மூத்த வழக்கறிஞர் அவர்களின் ஆலோசனை படி நிதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்வதற்காக திரு.சண்முகம் இ .ஆ.ப./,திரு.கிருஷ்ணன்  இ .ஆ.ப.,/,திருமதி .சபிதா இ .ஆ.ப.ஆகியோருக்கு நோட்டிஸ் இன்று  ( 05.12.14 ) அனுப்பப்பட்டது .அதன் எதிரொலியாக அரசு விரைந்து  அரசு ஆணை வெளியிட நிதித்துறை தீவிரம் காட்டி வருகிறது . 

இன்னும் ( மிக மிக குறுகிய காலத்தில் ) நாள்களில் அரசு ஆணை வெளியிட நிதித்துறை தீவிரம் காட்டி வருவதாக மிகவும் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

பள்ளிக்கல்வி - 2014-15ஆம் கல்வியாண்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல், மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து மகளிர் உயர்நிலைப் பள்ளிகளாக தனியாக பிரித்தல் விவர பட்டியல் வெளியீடு

GO.199 SCHOOL EDUCATION DEPT DATED.02.12.2014 - 2014-15 MIDDLE SCHOOLS TO HIGH SCHOOLS UPGRADED LIST CLICK HERE...

 அக இ - உயர்தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "அறிவியல் சோதனைகள் மற்றும் செயல்திட்டம் - மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் வட்டார மைய அளவில் 06.01.2014 முதல் 08.01.2014 வரை நடைபெறவுள்ளது.

SPD - 3DAYS BRC LEVEL TRAINING "SCIENCE EXPERIMENT & PROJECT - IMPROVEMENT" FOR UPPER PRIMARY TEACHERS FROM 06.01.2015 TO 08.01.2015 REG PROC CLICK HERE...

தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிட மாறுதல் - ஆணை வெளியிடப்படுகிறது

மாணவ/மாணவியருக்கு தற்போது வழங்கப் படுகின்ற ரூ 50,000/- நிதியினை ரூ 75,000/- ஆக உயர்த்தி வழங்கி அரசாணை சார்ந்து -தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை —

CLICK HERE-DIR .PRO REG ACCIDENT SCHLORSHIP-
பரப்பாடி அரசு மேல் நிலை பள்ளி க்கு  விரைவில் புதிய பணியிடம் -- இயக்குனர் .

தனியார் நிதி உதவி பெறும் பள்ளிகளில் நீதியரசர் சம்பத் அவர்களின் பரிந்துரைகளை செயல்படுத்திடபள்ளி கல்வி இயக்குனர் தகவல்


திருச்சி மாவட்டம் - துறை தேர்வு பயிற்சி -புதுகோட்டை மாவட்டம்  டாட்டா மாவட்ட செயலாளர்  திரு.யோவேல் அவர்களால் நடத்தப் படுகிறது .விருப்பம்  உள்ளவர்கள் பயிற்ச்சிக்கு தொடர்பு ; 94882 - 94050.


meeting DEEO





 

14.12.2014 அன்று திருச்சியில் TATA பொதுக்குழு. பிற்பகல் 2.00 மணி

இடம் ;- ரவி மினி ஹால் .-
சத்திரம் பேருந்து நிலையம்
( கலைஞர் அறிவாலையம்  அருகில் ) -திருச்சி

1. உறுப்பினர்களின் விவரம்.
2. Cps book, dairy and calendar தேவைபட்டியலுடன் மாவட்டம் சார்பாக முன்பணம் ரூ.5000/-
3. அனைத்து பொறுப்பாளர்களின் முகவரி(பள்ளி&வீடு) மற்றும் தொடர்பு எண்.
போன்ற விவரங்களுடன் அனைத்து பொறுப்பாளர்களும் பங்கேற்க அழைக்கிறோம்.
மாநில அமைப்பு

பள்ளிக்கல்வி - மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் அறிவிப்பு - 128 புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்குதல், அப்பள்ளிகளுக்கு ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவித்தல் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல் - 128 தொடக்கப் பள்ளிகளின் பட்டியல் வெளியீட்டு அரசு உத்தரவு

CLICK HERE-GO.200 SCHOOL EDUCATION (SSA) DEPT DATED.02.12.2014 - 128 NEW PRIMARY SCHOOLS LIST - PAY & OTHER INFRASTRUCTURE RELEASED REG ORDER

 

 

பள்ளிக்கல்வி - மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் அறிவிப்பு - 128 புதிய தொடக்கப் பள்ளிகள் பட்டியல் வெளியீட்டு அரசு உத்தரவு

GO.200 SCHOOL EDUCATION (SSA) DEPT DATED.02.12.2014 - 128 NEW PRIMARY SCHOOLS LIST CLICK HERE...


****இடைநிலை ஆசிரியர்களே சிந்தியுங்கள் சில நிமிடம்*****
சில நிமிட சிந்தனையில் உதிக்கும் உத்தியால் உயரும் நம் மதிப்பு பலரது மத்தியில். மத்திய அரசுக்கு இணையான ஊதியம் நம் கல்வித்துறையில் நம்மைத்தவிர அனைவருக்கும்( 150000 பேர்) தரப்பட்டுள்ளது. நம் பெயர் மட்டும் தனித்து விடப்பட்டுள்ளது. அது ஏன் என்று கேட்டோமா?
கேட்டால் நாம் 10+ சான்றிதழ் படிப்பு எனச் சொல்கிறார்கள் ஊதியக்குழு அறிக்கையில். அதை யாராவது அறிந்தோமா?
என்னவென்றால் உங்களுக்கு கிராமத்தில் அனைத்துப் பொருட்களும் மலிவாகக் கிடைக்கிறது. வீடு விலையில்லாமல் கிடைக்கிறது என்கிறார்களே! நாம் எதிர்த்து குரல் கொடுத்தோமா? ஒரே கேள்வி கேட்கிறேன். பல கிராமங்கள் தோறும் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. அதில் பணிபுரியும் பட்டதாரி, முதுகலை மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு (150000 பேர்) மட்டும் மத்திய அரசுக்கு இணையாகக் கொடுதுள்ளீர்களே என வினவினோமா?
ஏன் ஒரே கல்வித்தகுதி, ஒரே பணியிலிருக்கும் இடைநிலை ஆசிரியர்களிலேயே ஊதிய வேறுபாடு உள்ளதை அறிவோமா? இல்லை, அறிநுதும் கேட்டோமா? 31.05.2009 வரை பணியில் சேர்ந்த நம்மில் ஒருவரான இ.ஆ க்கு pay×1.86+2800+750+ இதற்கு D.A எனவும், 01.06.2009 ல் சேர்ந்த அதே இ.ஆ ருக்கு pay +2800+750 + இதற்கு மட்டும் டி.ஏ என மாபெரும் வேறுபாடு உள்ளதே, அதையாவது ஏன் எனக் கேட்டோமா?
ஏன், இந்த விசயம் எல்லாம் மாபெரும் இயக்கங்கள் என மார்தட்டிக் கொள்ளும், நமக்காகவே உழைக்கிறோம் என்று சொல்லிக் கொள்ளும் சங்களுக்குத் ( சங்கம் என்பது உறுப்பினர்களின் உரிமையைக் காக்கவே) தெரியாதா? இல்லை தெரிந்தும் தெரியாதவர் போல் உள்ளனரா? இடைநிலை ஆசிரியர்கள் ரொம்ப நல்லவங்க. கேள்வியே கேட்க மாட்டாங்க. நீட்டற எடத்துல கேட்காம கையெழுத்துப் போடுவாங்க . இ.ஆ கள் இளிச்சவாய ஆசிரியர்களா? ஆனால் அந்த சங்கஙங்கள் நம் ஊதியக் குறைபாட்டைக்களைய அரசிடம் உறுதியாக நிற்க வில்லை. அவர்களுக்குக் கிடைக்க வேண்டியது கிடைத்த உடன் விலகிக் கொண்டார்கள் சிலர். பலருக்கு நம்மை எந்தக் கல்வித்திகுதியில் வைத்துள்ளனர் என்பதே தெரியாது?
சமீபமாகப் பணியில் வந்த நான் இவ்வளவு விசயங்கள் அறிந்து கேள்வி கேட்கிறேன் என்றால், அதற்கு காரணம் பேரியக்கங்கள் அல்ல. தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கப்( TAMILNADU ALL TEACHERS ASSOCIATION-TATA) பொதுச்செயலாளர் ஒருவரின் தனிமனிதப் போராட்டமே. தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்ற பல ஆவணங்களைப் பார்த்தே இத்தனை கேள்விகள் உதிக்கின்றன. கேள்வி கேட்டால்தான் விடை கிடைக்கும் தோழர்களே! இடைநிலை ஆசிரியர்கள் (2800 GP) அனைவரும் ஓரணியில் திரள்வோம்! நம் உரிமையைப் பெற்றிடுவோம்!!
இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கின் (  WP.NO.33399/13 ) தீர்ப்பு .நாள் 12.09.2014 ன் படி தீர்ப்பு நகல் வழங்கப்பட்ட நாளில் இருந்து ( 09.10.2014  ) 8 வார காலத்திற்குள் தமிழக அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியரின் ஊதியம் 9300 + 4200 என டிப்ளமோ கல்வி தகுதி அடிப்படையில் மாற்றி அமைத்திட வேண்டும் ஆனால் அரசு தரப்பில் இருந்து டாட்டா பொது செயலாளர் கிப்சன் அவர்களின் முகவரிக்கு ஆணை வரப் படாததாலும் 01.12.2014 சென்னை சென்று மாநில அமைப்பு சார்பாக நடைபெற்ற சந்திப்பின் அடிப்படையில் அரசு காலதாமதத்தை தடுக்கும் வகையில் முக்கியமானவர்களின் ஆலோசனை படியும் நமது மூத்த வழக்கறிஞர் அவர்களின் ஆலோசனை படியும் நேற்று  ( 04.12.14 ) இரவு 8.00 மணிக்கு  டாட்டா பொது செயலாளர் கிப்சன் ,மற்றும் மாநில செய்தி தொடர்பாளர் கார்கில் ராஜந்திரன் அவர்களும் வழக்கறிஞர் அலுவலகம் சென்று '' நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திட ஏதுவாக நமது மூத்த வழக்கறிஞர் அவர்களின்மூலம்
 திரு.சண்முகம் இ .ஆ.ப./,திரு.கிருஷ்ணன்  இ .ஆ.ப.,/,திருமதி .சபிதா இ .ஆ.ப.ஆகியோருக்கு நோட்டிஸ் இன்று  ( 05.12.14 ) அனுப்பப்பட்டு உள்ளது .இந்த  நோட்டிஸ்க்கான கால கெடு 2 வாரம் ஆகும் .அதற்குள் நமக்கு ஊதிய மாற்றம்  தமிழக அரசால் அறிவிக்கப்பட வில்லை என்றால் தான் வரும் ஜனவரிமாதம்  2015 ல்  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திடமுடியும் . மேற்படி சங்க பணியை முடித்து வீட்டிற்கு மறுநாள் அதிகாலை 4.45 மணிக்கு அதிக குளிரில் 15 கி.மீ தூரம் இரு சக்கர வாகனத்தில் வந்து சேர்ந்தேன் 

  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திட அவசர நிதி தேவை ரூ 60,000/-

ஏற்கனவே உள்ள பற்று      --------------ரூ  1,35,000
தற்போதைய தேவை                                 ரூ.30,000
மொத்த தேவை                                            ரூ .1,65,000

ஏற்கனவே வழக்கறிஞருக்கு வழங்க வேண்டிய பாக்கி ரூ.  30,000
அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திட                                      ரூ.30,000
அவசர நிதி தேவை                                                                           ரூ 60,000/-

12.09.2014 தீர்ப்புக்கு பின் வழக்கு நிதி வழங்கியவர்கள் 
------------------------------------------------------------------------------------------
1.அவினாசி ஒன்றியம் பணி ஒய்வு பெற்ற மூத்த ஆசிரியர் நடராஜன் அவரது மகள் கவிதா உடல்கல்வி ஆசிரியராக பணி செய்வதை முன்னிட்டு வழங்கியது                                                                                                                           ரூ. 5000
2. திருப்பூர் மாவட்டத்தை சார்ந்த tet ஆசிரியர்கள்                                               ரூ.5000
3.திருக் கோவிலூர் டாட்டா கிளை சார்பாக                                                           ரூ.5000
4.ஊத்தங்கரை சாமுவேல் ஆசிரியர் மூலமக                                                       ரூ.5000
5..ஊத்தங்கரைவெங்கடேசன் -அனுமன் தீர்த்தம்                                                 ரூ.2000
6.நீலகிரி -குன்னூர் சிலம்பரசன் ஆசிரியர்                                                              ரூ.2000
7.தளி ஒன்றியம் தினகரன் ஆசிரியர்                                                                          ரூ.1000
8.G.K. செல்வராஜ்  பென்னாகரம்  ஆசிரியர்                                                             ரூ.1000
9.ஆசிரியர் குரல் அருணாசலம்   த .ஆசிரியர்                                                      ரூ. 1000
10.பெயர் தெரியாதவர் மூலம்                                                                                     ரூ.1000
11. வேலூர் மாவட்டம் சம்பத் ஆசிரியர்                                                                  ரூ.500
                                                                                                                                  ----------------------

மொத்தவரவு                                                                                                         ரூ.          28,500   


அவசர நிதி தேவையை சந்தியுங்கள்    



C.KIPSON

SBI-AMBAI-NELLAI DIST, (

Tirunelveli

Branch :
Ambasamundram

IFSC Code :
SBIN0000804 (5th character is zero)

MICR Code :

Branch Code :
000804.

A/NO ; 30486085987

235.NORTH STREET

PARAPPADI 627110

NELLAI - DIST

E-mail ; kipson76@yahoo.in

அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் விடுமுறை நாட்களில் நடைபெறும் குறுவளமைய பயிற்சியில் கலந்துகொள்ளும் நாட்களுக்கு ஈடுசெய்யும் விடுப்புகளாக அனுமதித்து அரசு ஆணை வெளியீடு

தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப்பணி - 01.01.2015ல் உள்ளவாறு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்த முதுகலை பாட ஆசிரியர்கள் / முதுகலை மொழி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குனர் (மேல்நிலைக் கல்வி) / அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியல் தயார் சார்பான விவரம் கோரி இயக்குனர் உத்தரவு

GPF/TPF ACCOUNT STATEMENT FOR THE YEAR 2013-2014...

இயக்குனர்கள் மாற்றம்... பள்ளிக்கல்வித் துறை இயக்குனராக இருந்த திரு.வி.சி.இராமேஸ்வர முருகன் அவர்கள் SCERT இயக்குனராக மாற்றம், திரு.த.கண்ணப்பன் அவர்கள் பள்ளிக்கல்வித் துறை இயக்குனராக நியமனம்.


ஆசிரியர்களின் பி.காம்.,எம்.காம்., மற்றும் பி.எட்., பட்டம் பெற்றமைக்கு ஊக்க ஊதியம் அனுமதித்து ஆணை வெளியீடு...


அகஇ - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு குறுவளமைய அளவில் ஒரு நாள் பயிற்சி "எளிய உடற்பயிற்சி / உள்ளரங்கு மற்றும் பாரம்பரிய விளையாட்டுகள்" என்ற தலைப்பில் 13.12.2014 நடைபெறவுள்ளது.

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலராக கே.ஞானதேசிகன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் பொதுப்பணித்துறை சார்பில், பொதுத்துறை சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
அதிமுக ஆட்சியமைத்து மூன்றரை ஆண்டு காலத்தில் பொறுப்பேற்கும் 5வது தலைமை செயலாளர் ஞானதேசிகன் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தோஷ செய்தி மிக விரைவில் - 01.12.2014 அன்று சென்னை சந்திப்பு விபரம்

நமது சங்கத்தின் சார்பாக 1.12.14 திங்கள் அன்று பொது செயலாளர் கிப்சன் அவர்கள் தலைமையில் தருமபுரி மாவட்ட தலைவர் மூர்த்தி / கிருஷ்ணகிரி மாவட்டம் வெங்கடேஷ் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் செந்தமிழ் செல்வன் , மாநில துணை தலைவர் சபரிராஜ் ,மண்டல தலைவர்செங்கம் நந்தகுமார் , ,மண்டல  செயலாளர் சம்பத் மாநில செயலாளர் அரியலூர் செங்குட்டுவன் ,செந்துறை உதயகுமார் ஆகியோர் கலை 10.00 மணி அளவில் நிதித்துறை செயலாளர் அவர்களை சந்திக்க சென்றோம் .நிதித்துறை செயலாளர்அவர்கள் இன்றுதான் 45 நாள் பயிற்சிக்கு சென்றவர் மீண்டும்  பணி ஏற்று உள்ளார்கள் /தங்களது வழக்கு குறித்து ஊதிய பிரிவு துணை செயலாளர் அவர்களிடம்தான் கோப்புகள் உள்ளது .அவரை சந்தித்து விபரம் அறிந்து கொள்ளுங்கள் என தனது நேர்முக உதவியாளர் மூலம் தெரிவித்தார் .

                                   நாங்கள்  ஊதிய பிரிவு துணை செயலாளர் அவர்களை  சந்தித்தோம் . அவர்கள் உங்கள் கோப்புகள் ஆயத்த நிலையில் உள்ளது .நிதித்துறை செயலாளர் 45 நாள் பயிற்சிக்கு சென்றவர்  இன்றுதான் பணி ஏற்று உள்ளார்கள் .அவர்களும் மாண்பு மிகு முதலமைச்சர் அவர்களும் கோப்புகளை பார்த்து ஒப்புதல் வழங்கிய பின் ஆணை பிறப்பிக்கப்பட்டு அதன் நகல் தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்கள் .நல்ல செய்தி வரும்  என்றார்கள். மேலும் பல்வேறு ஆதரங்களை நீங்கள் RTI மூலம் பெற்று இணைத்து உள்ளீர்கள் என பாராட்டு தெரிவித்தார்கள்,

                               கல்வித்துறை செயலாளர் அவர்கள் தங்கள் ஊதிய வழக்கு சார்பாக துணை செயலாளர்திரு ,வேதரத்தினம் அவர்களிடம் பேசுங்கள் என்றார்கள் அவர்கள் சார்பு  செயலாளர் திரு ,சேகர் அவர்களை அழைத்து எங்களிடம் பேச செய்தார்கள் ,நமது  ஊதிய வழக்குமீது அரசின் நடவடிக்கை குறித்து கேட்டோம் .உங்களது மனு ஆய்வு செய்யப்பட்டு கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பாகவே நிதித்துறைக்கு அனுப்பப் பட்டு விட்டது என்று தெரிவித்தார்கள் .
                மீண்டும் மாலை இயக்குனர் அலுவலகம் சென்றோம் .அங்கு நமது சங்கத்தின் கோரிக்கை மனுக்களை கொடுத்து விட்டு இரவு 7.30 மணிக்கு தான் இயக்குனர் அலுவகத்தில் இருந்து ரூம்புக்கு திரும்பி வீட்டிற்கு வந்து சேர்ந்தோம் .
             நிதித்துறை செயலாளர் அவர்கள் சட்ட சபை கூட்ட தொடர் முடியும் டிசம்பர் 8 வரை நமது கோப்புகளை  பார்க்க வாய்ப்பு இல்லை என்றார்கள் .
மேலும் பல்வேறு ரகசியங்களை வெளியிட முடியாத நிலையில் வெளியிட வில்லை .நமக்கு விரைவில் நல்லது நடக்க நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திட ஊள்ளோம் .உங்கள் ஆதரவை TATA சங்கத்திற்கு தொடர்ந்து தாருங்கள் .நமது சங்கத்தின் கிளைகளை துவங்கி .உங்கள் ஆதரவை TATA சங்கத்திற்கு தொடர்ந்து தாருங்கள்.




CPS ஒப்புகை சீட்டு வழங்க & சரிபார்க்க இன்னும் 10 நாட்கள் மட்டுமே CPS ஒப்புகை சீட்டு வழங்க & சரிபார்க்க இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளன.தங்கள் ஒன்றியத்தில் வழங்கப்பட்டுள்ளதா ?? தொடக்க கல்வி துறையில் இதுவரை வழங்கப்படாமல் இருந்த தன் பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டத்தில்( CPS ) 01.04.2003 பின் நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கும் (தொடக்க கல்வி துறையில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ஒப்புகைசீட்டு (A/C SLIP) வழங்கப்படாமல் இருந்தது.  தொடக்க கல்வி இயக்குனர்  அவர்கள் ஒப்புகை சீட்டு வழங்க 11.09.2014 உத்தரவிட்டார் .இதன் மூலம் அனைத்து கருவுலம் வழியாக உதவி தொடக்க கல்வி அலுலகங்களுக்கு ஒப்புகைசீட்டு குறுந்தகடு (CD) மூலம் அனுப்பப்பட்டது ,இது கிடைக்கப்பெற்று 3 மாதங்களுக்குள் விடுபட்ட பதிவுகள் ஏதேனும் இருப்பின் அல்லது சில நபர்கள் மொத்தமாக பதிவுகள் இல்லை என்றாலும் உடனே கருவூலம் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும்.அக்காலக்கெடு வரும் டிசம்பர் -10 ம் தேதி முடிவடைகிறது அதன் பின் இப்போது உள்ள பதிவுகள் சரியாக உள்ளது என்று அரசால் ஏற்றுக்கொள்ள படும் .தற்போது பெரும்பாலான ஒன்றியங்களில் ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டுள்ளது,,இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளது.