PAGEVIEWERS

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தினர் உண்ணாவிரதம் கட்சி தலைவர்கள் ஆதரவு

சென்னை5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தினர் நேற்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரதம்
மத்திய அரசுக்கு இணையாக மாநில அரசின் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கிட வேண்டும். தன்பங்களிப்பு
ஓய்வூதியம் ரத்து செய்திட வேண்டும் என்பது உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் ஆசிரியர்கள் ஏராளமானோர் நேற்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
உண்ணாவிரத போராட்டத்துக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டா) ஒருங்கிணைப்பாளர் பி.கே.இளமாறன் தலைமை தாங்கினார். 18 ஆசிரியர் சங்க உயர் மட்டக்குழு உறுப்பினர் கே.தயாளன்கிப்சன் முன்னிலை வகித்தனர்.

இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் பி.கே.இளமாறன் கூறியதாவது:–
மத்திய அரசில் பணியாற்றும்...
மத்திய அரசில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்கிட வேண்டும். தன்பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை (ஜி.பி.எப்.) தொடர்ந்திட வேண்டும்.
தமிழ்மொழி வழிக்கல்வி, சமச்சீர் கல்வி, அருகமைப்பள்ளிகள்பொதுப்பள்ளிகள் திட்டம், குழந்தை நேயக்கல்வி ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாட்டுக்கு என தனிக்கல்வி கொள்கையினை அரசு அறிவித்திட வேண்டும்.

அரசாணை 132– ரத்து செய்து விவசாயம், நெசவு, மரவேலை பாடப்பிரிவு ஆசிரியர்களுக்கு பள்ளிகளில் பணிநியமனம் செய்ய வேண்டும் என்பது உள்பட 5 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறுகிறது. இதற்கடுத்தாவது தமிழக அரசு எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

கட்சி தலைவர்கள் ஆதரவு
இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு, பா... நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மாநில துணை பொதுச்செயலாளர் .கே.மூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், கொள்கை பரப்பு துணைச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மூத்த நிர்வாகி கோவை தங்கம், முன்னாள் எம்.எல்.. விடியல் சேகர் ஆகியோர் நேரில் வந்து ஆதரவு தெரிவித்து பேசினார்கள்.

இதேபோல், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன பொதுச்செயலாளர் மு.துரைபாண்டியன், பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பை சேர்ந்த பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோரும் வந்து உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்தார்கள்.

No comments:

Post a Comment