PAGEVIEWERS

ஓ!இடைநிலை ஆசிரியப் பேரினமே! 🌺
அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்கிறார்களே!
நீங்களோ எத்தனைதான் அடி அடித்தாலும் அசையாமல் நிற்பது ஏனோ?
ஆறாவது ஊதியக்குழு இடைநிலை ஆசிரியர் வயிற்றில் அடித்திருக்கிறதே?
உனது வயிறு பற்றிக்கொண்டு எரியவில்லையா?
பொறுமை கடலினும் பெரிது எனும் வள்ளுவன் வாக்குக்கிணங்க பொறுமை காக்கிறாயோ?
இது பொறுமையாக இருக்க வேண்டிய காலமா? இல்லை!இல்லவே இல்லை!
🌺இந்தக் காலத்தில் நீ மௌனமாக இருந்தால் உன் எதிர்கால ஆசிரிய சமுதாயத்தை யாராலும் மீட்டெடுக்க முடியாது என்பதை அறிவாயோ?
🌺ஆறாவது ஊதியக்குழுவில் ₹10,000 பாதிப்பு என்றால் 2016-ல் ஏழாவது ஊதியக்குழுவில் உனது பாதிப்பு ₹20,000 என்பதைஅறிந்தும் மௌனம் காக்கிறாயோ?
நமக்கு காலம் கை கொடுக்கவில்லை.இன்னும் ஒரு சில நாட்களே உள்ளது.அதற்குள் ஏதாவது செய்ய வேண்டுமே!
பொங்கியெழு.......
வீறுகொண்டெழு......
🌺👍ஊதியம் பெறும் வரை ஓய மாட்டேன் என உள்ளத்தில் உறுதிகொள்.......
👍🍀
உனக்காக நீ உழைக்காமல் வேறு யார் உழைப்பார்?
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை உலகுக்கு உணர்த்துவோம்!ஒற்றுமையின் பலத்தை உலகுக்கு பறைசாற்றுவோம்!
🍀பாதிக்கப்பட்டவனுக்கே அந்த பாதிப்பின் வலி தெரியும்.உள்ளத்தில் வலி இருந்தால் நிச்சயம் வழி பிறக்கும்.
நம்முடைய தர ஊதியம் ₹2800 காட்டுகிறது நாம் தரம் தாழ்த்தப்பட்டிருக்கிறோம் என்பதை.
நாம் தலை நிமிர்ந்து வாழ வேண்டுமானால்,நம் தர ஊதியம் உயர வேண்டும்.
இன்னும் ஏன் பொறுமையாக இருக்கிறாய்?
😛😝யாரோ நமக்காக போராடி வாங்கித் தருவார்கள் என பகல் கனவு காண்கிறாயோ!
😳பகல் கனவு என்றும் பலித்ததில்லையே! இதை நீ அறியாயோ!
யாரும் நமக்காக போராடவில்லை.அவர்கள் அவர்களுக்காக மட்டுமே போராடுகிறார்கள்.அவர்கள் நமக்கு ஒன்றும் பெற்றுத் தரப்போவதுமில்லை.
🐎🐎விரைவாக பாதிக்கப்பட்ட 2009 மற்றும் Tet ஆசிரியர்களை ஒன்று சேர்ப்போம்.நாம் ஒன்றுபட்டால் நிச்சயம் நமக்கு தீர்வு உண்டு......
🙏🙏🙏
🍄🍄ஒவ்வொவரும் நிச்சயம் செயல்படுவீர்கள் என்ற நம்பிக்கையில்....
🌸🍁 👍👍 உங்களில் ஒருவன்.👍

No comments:

Post a Comment