PAGEVIEWERS


TATA- சங்கம் உச்ச நீதிமன்ற ஊதிய வழக்கு -விசாரணை  ஏன் ? வரவில்லை.....

TATA- சங்க மாவட்ட ,வட்டார  பொறுப்பாளர்களுக்கும்  ,உறுப்பினர்களுக்கும் நண்பர்களுக்கும் வேண்டுகோள் .....

நமது இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு கடந்த 12.9.2015 அன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது .மேற்படி வழக்கு தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே விசாரணைக்கு வர வேண்டியது .ஆனால் வழக்கறிஞருக்கு நமது சங்கம் பேசிய வாக்கு கொடுத்தப்படி படி நவம்பர் முதல் வாரத்தில் ரூ 50,000 கொடுக்க முடிய வில்லை அதன் காரணமாகத்தான் வழக்கு நீண்ட நாள்களாக தள்ளிப்போய் கொண்டு உள்ளது.உச்ச நீதிமன்ற இணைய தளத்தின் அட்வான்ஸ் கேஸ் லிஸ்டில் வந்து கொண்டு இருக்கிறது .இப்படியே போனால் விசாரணைக்கு வர 3 மாதங்கள் வரை ஆகலாம் .எனவே நாம் பேசியபடி வழக்கறிஞருக்கு ரூ.50,000 கொடுக்க உங்கள் ஒத்துழைப்பை வேண்டுகிறேன் .இந்த வழக்கு தனி ஒருவர் ஊதிய மாற்றம் வேண்டி நடக்க வில்லை .ஒட்டு மொத்த இடைநிலை ஆசிரியர்களின் இழந்த உரிமை மீட்கப்பட நடைபெறும் வழக்கு ஆகும்.ஆனால் ஒட்டு மொத்த இடைநிலை ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் வழக்கு நடைபெற்று வருகிறது..இந்த ஊதிய வழக்குக்கு நாம் பேசி உள்ள தொகை ரூ.2,50,000 ஆகும்.நாம் கொடுத்து உள்ளது ரூ.50,000 மட்டுமே ஆகும்,நிதி இல்லாமல் இடைநிலை ஆசிரியரின் நீதி தாமதம் ஆகுகிறது.எனவே TATA- சங்க மாவட்ட ,வட்டார  பொறுப்பாளர்களுக்கும்  ,உறுப்பினர்களுக்கும் நண்பர்களுக்கும் இந்த வழக்கு விரைந்து முடிக்கப்பட தங்களின் மேலான ஆதரவை தாருங்கள் .

 

No comments:

Post a Comment