PAGEVIEWERS

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

 
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்.

மருத்துவ தரிவரிசை பட்டியலில் 3 பேர் முதலிடம் பிடித்துள்ளனர் என மருத்துவ கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. முதலிடத்தை கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதித்யா மகேசும், 2வது இடத்தை ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேசும், 3வது இடத்தை விஜயவாடாவைச் சேர்ந்த ஜெய ஞானவேலும் பிடித்துள்ளனர்.

தரவரிசை பட்டியல் குறித்த விபரங்களை www.tnhealth.org என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.   நடப்பாண்டில் தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., தனியார் மற்றும் அரசு மருத்துவ கல்லூரிகளில் 2723 இடங்கள் உள்ளன. பிடிஎஸ் படிப்பிற்கு 1055 இடங்கள் உள்ளன.

2 இஎஸ்ஐ மருத்துவ கல்லூரிகளுக்கான 130 இடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதுவரை மருத்துவ கவுன்சிலிங்கிற்கு 27, 450 பேர் விண்ணப்பித்துள்ளனர். மருத்துவ கவுன்சிலிங் ஜூன் 20 ம் தேதி துவங்க உள்ளது.

தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப்பணி - 01.01.2016 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்க தகுதியான நபர்களின் பெயர்ப்பட்டியல் அனுப்புதல் சார்பு


TO DOWNLOAD PROCEEDING LTR CLICK HERE...


MATHS AND PHYSICS PANEL 2016-07 CLICK HERE...

தமிழகத்தில் 26 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

மாநில தேர்தல் ஆணையராக டி.எஸ்.ராஜேசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

பெயர் புதிய பதவி (கூடுதல் பொறுப்பு)

1. எஸ்.கே.பிரபாகர்- செயலர், பொதுப்பணித்துறை

2. என்.எஸ்.பழனியப்பன்- செயலர், எரிசக்தித்துறை

3. ஜக்மோகன் சிங் ராஜூ- தலைவர், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை

4. மங்கத் ராம் சர்மா- செயலர், சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை (தலைவர், சிட்கோ)

5. சி.சந்திரமவுலி- ஆணையர், வணிகவரித்துறை ( செயலர், வணிகவரி மற்றும் பதிவுத்துறை)

6.ஆர். வெங்கடேசன்- செயலர், செய்தி மற்றும் தமிழ்வளர்ச்சித்துறை( செயலர், வருவாய்த்துறை)
TATAவின் 5வருட சாதனைகள் ...

He is commenting about TATA &TATA.
Before commenting any one...you must know what I am...commenting whom...past history...what is going on now...
Not knowing anything...having lot of strength...what is the use...strength/age will not workout...hand full of dash...what's the use...
Last 9 years what u are doing...
Now also not doing fruitful.....nothing...

இடைநிலை ஆசிரியருக்கு பிரச்ச்னைகள் இருக்குன்னு சொல்லி தூங்கி கிடந்த உங்களை எழுப்பியது TATA சங்கங்களே...
என்ன நடந்தது...இன்னும் அரசு இடைநிலை ஆசிரியரை டிப்ளமோ ஹோல்டர் இல்லை என்றுதான் சொல்லி வருகிறது...
TATA சங்கங் சாதனைகள் கடந்த சில வருடங்களில்....

--மாநில மூப்பு அடப்படையில் பணி நியமனம் உச்ச நீதிமன்றம் மூலமாக.நியமனம் பெற்றவர்கள் மாவட்ட மாறுத்தல் பெற முதன் முதலில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து தீர்ப்பு பெற்றது .... நாங்களே..

--இடைநிலை ஆசிரியர்களின் 6வது ஊதிய குழுவில் 'பிரச்சனை உள்ளது' என்று சென்னை உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பு .... நாங்களே...

--தற்போது இடைநிலை ஆசிரியர்களுக்கு 9300+4200 வழங்கிட ஊதிய பிரச்சனை தொடர்பாக உச்ச நீதி மன்ற வழக்கு - நிலுவையில்....

....தொடக்க கல்வி துறையில் மாநில அளவில் பதவி உயர்வு வழக்கு நிலுவையில் .....

....ஆசிரியர் நலனுக்காய் 10 கோரிக்கைகளை நிறைவேற்றிட தேர்தல் ஆணையம் மீது பொது நல வழக்கு ....மதுரை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நாள் ..18.02.2016.

... CPS..திட்டம் தவறானது, 2003 க்கு பின் ஓய்வு ,,மரணம் அடைந்தவைகளுக்கு ( 216 பேர் ) கட்டிய பணம் திரும்ப வழங்கிட வேண்டும் .தற்காலிக ஓய்வுதியம் ரூ.10,000/= அனுமதிக்க வேண்டும் .கமுடேசன் வழங்கிட வேண்டும்.என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ...விசாரணை நாள் ...23-02-2016 .

எங்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகும்..

...ஆசிரியாரின் நலனுக்காய் உண்மையாய் உழைக்கும் சங்கம் டாட்டா மட்டுமே.!!!!!

We don't want any appreciation r recognition...
We r fighting on our way...ultimately v also FOR teachers only...
Leave us alone...pl don't pass any negative comments against us....
--from Kipson Tata
10-06-2016.உயர்திரு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களை சந்தித்து தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் TATA சார்பில் கோரிக்கைகள் அளிக்கப்பட்டன.




10-06-2016.உயர்திரு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களை சந்தித்து தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் TATA சார்பில் கோரிக்கைகள் அளிக்கப்பட்டன.



கோரிக்கைகள்:- 

1.மாணவர்களின் விலையில்லா நலதிட்ட பொருட்கள் பள்ளிக்கே நேரடியாக வழங்கப்பட வேண்டும்.

இயக்குனர் பதில் ;-அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் .

2.தெலுங்கு,உருது,கன்னடம் ,மலையாளம்
நடுநிலைப்பள்ளிகளில் கல்வி உரிமை சட்ட படி   தமிழ் பட்டதாரி பணியிடங்களை ஏற்படுத்தி பதவி உயர்வு வழங்க வேண்டும்.
இயக்குனர் பதில்;-  -அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் புதிய பணியிடங்கள் உருவாக்க பட்டு பதவி உயர்வு வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் .


 3.1997-98 ல் பின்னடைவு காலி பணியிடத்தில் (SC/ST) பணியேற்ற பட்டதாரி தகுதியுடைய இடைநிலை ஆசிரியர்களுக்கு வரும் கலந்தாய்வில் பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.
 இயக்குனர் பதில்;- உரிய நடவடிக்கை எடுக்கப்படும் .

 4.இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வினை ஒளிவு மறைவின்றி உடனடியாக நடத்திட வேண்டும்.
இயக்குனர் பதில்;- தற்போதைய நிலையில் அரசு பணி மாறுதல் குறித்து இறுதி முடிவு எதுவும் எடுக்க வில்லை .

  5.Economics,commerce,(M.A M.COM WITH B.ED) படித்த இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.வினையாக மிஷன் பட்ட படிப்புகளுக்கு ஊக்க ஊதியம் அனுமதிக்க வேண்டும்.பின்னேற்பு வேண்டி 1.5 வருடமாக நிலுனையில் உள்ள கோப்புகளுக்கு விரைந்து அனுமதி வழங்கிட வேண்டும்.
இயக்குனர் பதில்;-  விரைவில் 2   வாரத்திற்குள் இவற்றிற்கு அரசு ஆணை வெளிவரும்.அதன்பின் பணபலன் பெற உரிய தெளிவுரை வழங்கப்படும்


  6.மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை உடனடியாக வழங்கிட வேண்டும்.
 இயக்குனர் பதில்;-  விரைவில் வழங்கிட உள்ளது.

7. தனியார் பள்ளி சட்டம் 1973 சட்ட பிரிவு 31 ன் படி இயக்குனர் அனுமதி இல்லாமல் நிதிஉதவி பெறும் தனியார் பள்ளிகளை விற்பனை செய்வதோ அல்லது தனது வாரிசுகளுக்கு தனமாகவோ ,நன்கொடையாகவோ கொடுப்பது செல்லாது என்பது கூறித்து அணைத்து DEEO களுக்கும் தெரிவுரை வழங்கிட வேண்டும்.முன் அனுமதி பெறாமல் மாற்றம் செய்யப்பட்ட பள்ளி நிர்வாக மாற்ற ஆணை ரத்து செய்திட வேண்டும். 
 இயக்குனர் பதில்;-  விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் வழங்கிய பள்ளிகள் பற்றி எனது கவனத்திற்கு கொண்டு வந்தால் நிர்வாக மாற்றம் ரத்து செய்யப்படும்.
 
💢💢💢💢💢💢💢💢💢💢💢AEEO அலுவலக தகவல்: முதல் வகுப்பில் மாணவர் சேர்க்கை பற்றிய தகவல். 31-7-2011க்குள் பிறந்த மாணவர்களை முதல் வகுப்பில் சேர்க்க எந்த தடையும் இல்லை. 01-08-2011முதல் 31-08-2011 வரை பிறந்த மாணவர்களை சேர்த்துக்கொண்டு AEEO /AAEEO விடம் தவிர்ப்பாணை வேண்டி விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளவும். 01-09-2011முதல் 30-11-2011 வரை பிறந்துள்ள மாணவர்களை முதல் வகுப்பில் சேர்த்துக்கொண்டு 01-08-2016 க்கு பின்னர் தொகுத்து பட்டிலிட்டு மாணவனின் பிறந்த நாள் சான்று இணைத்து DEEO விற்கு இரண்டு நகல்களில் விண்ணப்பித்து தவிர்ப்பாணை கண்டிப்பாக பெற்றுக்கொள்ளவும்.💢💢💢💢💢💢💢💢💢💢

G.O.165 Dt:01.06.16 MEDICAL AID – NHIS 2014 for Pensioners (including spouse) /Family Pensioners – List of Addl Hospitals covered under this scheme and Addl Specialties included in the Hospitals already empanelled under this Scheme – Approved

















 




 

2016-2017-தொடக்க கல்வி-உதவி தொடக்க கல்வி அலுவலர்/கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பள்ளிகள் ஆண்டாய்வு,பள்ளிகள் பார்வை சார்ந்து தொடக்க கல்வி இயக்குனரின் அறிவுரைகள்...

தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு...............

 

 

புதுச்சேரியில் பள்ளிகளின் கோடை விடுமுறை: ஜூன் 6-ம் தேதி வரை நீட்டிப்பு.....

பிளஸ் 2 தேர்வில் அதிக தேர்ச்சி: ஈரோடு மாவட்டம் முதலிடம்; கடைசி இடத்தில் வேலூர் மாவட்டம்

1. கன்னியாகுமரி : 95.7 சதவீதம்
2. திருநெல்வேலி : 94.76 சதவீதம்
3. தூத்துக்குடி : 95.47 சதவீதம்
4. ராமநாதபுரம் : 95.04 சதவீதம்
5. சிவகங்கை : 95.07 சதவீதம்
6. விருதுநகர் : 95.73 சதவீதம்
7. தேனி : 95.11 சதவீதம்
8. மதுரை : 93.19 சதவீதம்
9. திண்டுக்கல் : 90.48 சதவீதம்
10. ஊட்டி : 91.29 சதவீதம்
டாட்டா சங்கம் -ஆசிரியர்கள் - -2016 சட்ட மன்ற தேர்தல் பணி சார்பாக உயர் நீதிமன்றம் -மதுரை கிளை -வழக்கு காரணமாக -பல்வேறு சலுகைகள் வழங்கி உள்ளார்கள் .அதன்படி
  பெண் ஆசிரியர்கள் மற்றும் அரசு உழியர்கள் ஆகியோரை பணிபுரியும் சட்ட மன்ற தொகுதியில் பணி நியமனம் செய்திட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்தின்  ஆணையை -தமிழக தலைமை தேர்தல் அலுவலர் திரு.ராஜேஷ் லக்கானி .இ .ஆ.ப. அவர்கள் அனுப்பி உள்ளார்கள்-TATA KIPSON.  


இந்த ஆணையைக்கு புறம்பாக தேர்தல் பணி நெடுந்தொலைவில் நியமனம் செய்யப்பட்டால்  மாவட்ட ஆட்சியர்  மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் மற்றும் தமிழக தலைமை தேர்தல் ஆணையாளர் ஆகியேருக்கு புகார் அனுப்புங்கள் ....

1. Dr. Nasim Zaidi



Chief Election   Commissioner.    NIRVACHANSADAN. ASHOKA ROAD     NEW DELHI-110001             

 2.திரு.ராஜேஷ் லக்கானி .இ .ஆ .ப .
 தமிழக தலைமை தேர்தல் ஆணையாளர்.
பொது தேர்தல்கள் துறை .
தலைமை செயலகம் .சென்னை -9.





 
 
 டாட்டா சங்கம் -தேர்தல் பணி -வழக்கு -இந்திய தேர்தல் ஆணைய ஆணைக்கு புறம்பாக - பல இடங்களில் பெண் ஆசிரியர்களுக்கு ஆணைக்கு புறம்பாக மாவட்ட தேர்தல் அலுவலர்கள் பணி புரியும் ஒன்றியத்தை விட்டு பலருக்கு  மீண்டும் நெடுந்துரத்தில் தேர்தல் பணி வழங்கப்பட்டு உள்ளதாக புகார்கள் வந்து உள்ளது .எனவே ஆணையை மீறி செயல் பட்ட மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் , அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு தாக்கல் செய்திடவும் தங்களது தேர்தல் பணி ஆணையை இஸ்கேன் செய்து e.mail : - kipson76@yahoo.in என்ற இ - மெயில்  முகவரிக்கு அனுபவும் . இது எதிர் காலத்தில் பணியாற்றும் இடத்திலேயே தங்களுக்கு தேர்தல் பணி கிடைக்க உதவிடும்.

இப்படிக்கு 
 டாட்டா .கிப்சன் .
பொது செயலாளர் 
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் .
9443464081//9840876481/
2016- சட்ட மன்ற பொது தேர்தல் - கல்வித்துறை செயலாளர் -6 வருடம் ஒரே இடத்தில் பணி - திருமதி. சபிதா .அவர்களை  பணியிடம் மாற்றம் செய்திட தனக்கு அதிகாரம் இல்லை என கடித எண் :- 8931/2016 நாள் .25.4.2016.மூலம் தேர்தல் ஆணையம் அறிவிப்பு .ஆனால் கடித எண் :-7815/2016 நாள் . 22.4.2016 மூலம் திருமதி. சபிதா .அவர்கள் மீதான புகார் மீது தலைமை செயலாளர் அறிக்கையுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் அவர்களுக்கு உரிய நடவடிக்கைக்காக் அனுப்பப் பட்டு உள்ளது என தமிழக தேர்தல் ஆணையம் முன்னுக்கு பின் முரணான தகவல் வழங்கப்பட்டு உள்ளது .

 
நமது ஜனநாயக கடமையான வாக்குரிமையை கண்டிப்பாக தவராமல் பயன்படுத்தி வாக்களிக்க வேண்டும்....
போராட்டத்தில் பங்குபெற்று கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்ற மன வேதனையில் உள்ள ஆசிரியராக இருந்தாலும் சரி...
போராட்டத்தில் பங்குபெறாத ஆசிரியராக இருந்தாலும் சரி....
தங்களுடைய தபால் ஓட்டை கண்டிப்பாக உரிமையோடு பெற்று கீழ் காணும் வழிமுறைகளை பின்பற்றி வாக்களிக்கவும்....
நமது தபால் வாக்கு சதவீதத்தை வைத்துதான் அமையவிருக்கும் அரசு நமது தற்போதய கோரிக்கையானாலும் சரி அல்லது 7வது ஊதிய குழுவை ஊதிய நிர்ணயமானாலும் சரி அனைத்து முடிவையும் எடுக்கும்....
ஆகையால் இதில் தயவுசெய்து சோம்பலோ...
எந்த சமரசமோ வேண்டாம்....
தபால் ஓட்டில் செய்ய வேண்டியவை ,செய்ய கூடாதவை !!!
தபால் ஓட்டில் செய்ய வேண்டியவை,செய்ய கூடாதவை !!!

100% தபால் ஓட்டு பதிவிற்காக தபால் ஓட்டு பதிவு செய்யும் போது கவனிக்க... 👀👁👁👀
🔸 முதலில் கட்சிகளின் சின்னம் அடங்கிய துண்டு சீட்டில் தங்களுக்கு பிடித்த சின்னத்துக்கு அருகில் டிக் அடிக்க வேண்டும் .
🔸 நாம் அடிக்கின்ற டிக் பக்கத்தில் இருக்கும் சின்னத்தில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
🔸✍🏻 டிக் அடித்த துண்டு சீட்டை A என்ற rose color office cover ல் வைத்து ஒட்ட வேண்டும்.
staple பண்ணக்கூடாது.
🔸 13A என்று ஒரு form இருக்கும் . அதை சரியாக fill பண்ணி தங்களுக்கு தெரிந்தattested பண்ண தகுதி உடைய நண்பர்களிடம் அந்த form 13A ல் attested வாங்க வேண்டும்.
🔸 பின்னர் A என்ற ஒட்டிய rose color office coverயும் , form 13A யும் சேர்த்து B என்ற கவரில் போட்டு ஒட்டி விட வேண்டும் .
குறிப்பு :
செய்யக்கூடாதது.
🔹 form 13A ல் attested வாங்காமல் இருக்கக் கூடாது.
🔹 இரண்டு office cover யும் ஒட்டாமல் இருக்கக் கூடாது.
🔹 form 13A ஐ A என்ற கவருக்குள் தப்பபித்தவரி கூட வைத்து விடக்கூடாது.
🔹 மேலும் சந்தேகம் இருந்தால் உங்கள் நண்பர்களிடம் discuss பண்ணி தெளிவு படுத்தி கொள்ளுங்கள் .
🔹இந்த முறை ஒரு தபால் வாக்கு கூட செல்லாத வாக்காக இருக்கக்கூடாது.
** இதில் சமரசம் செய்தால் நமது எதிர்காலம் கேள்விக்குறிதான்...

வாக்காளர் பட்டியலில் நேற்று 29.4.16 முதல் வரிசை எண் மாறியுள்ளது, சரி பார்த்துக் கொள்ளவும்,,,,,,

 டாட்டா ஆசிரியர் சங்கம் கருத்து கணிப்பின் படி 2016 சட்ட மன்ற பொது தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று தி.மு.க ஆட்சியை பிடிக்கும்....

டாட்டா சங்கத்தின் பல்வேறு கோரிக்கைகள் ஏற்று தி.மு.க தனது தேர்தல் அறிக்கை  மூலம் உறுதி வழங்கி உள்ளது .அதற்கு டாட்டா சங்கத்தின் வாழ்த்துகள் ...





2016-சட்ட மன்ற பொது தேர்தல் - கல்வித்துறை செயலாளர் -6 வருடம் ஒரே இடத்தில் பணி - திருமதி. சபிதா .அவர்களை  பணியிடம் மாற்றம் செய்திட தனக்கு அதிகாரம் இல்லை என தேர்தல் ஆணையம் அறிவிப்பு .







வெற்றியை நிர்ணயித்த தபால் ஓட்டுகள்..
தேர்தல் முடிவினை தலைகீழாய் திருப்பிப் போட்ட தபால் ஓட்டுகள் என்ற தலைப்புச் செய்தியை மே 19-ல் நாம் அனைத்து ஊடகங்களிலும் காணலாம்..
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் இயக்க நடவடிக்கைகளுக்கு செவிமடுக்காத ஆட்சியாளர்களை இரு செவி கொடுத்து கேட்க வைக்க- நமது 100% தபால் ஓட்டுகள் தேவை.
இதுவரை ஆட்சிசெய்தவர்களாகட்டும்,
இனி ஆட்சி செய்யப் போகிறவர்களாகட்டும்..

யாராக இருந்தாலும் சரி...
நம் வலிமையை அவர்களுக்கு உணர்த்த இதுவே தருணம்..
ஒவ்வொரு முறையும் (வரலாற்றின் பக்கங்களை திருப்பிப் பார்த்தவர்களுக்கு தெரியும்) நாம் தெருவில் இறங்கிப் போராடியது போதும்...
இனியும் இந்த நிலை நீடிக்காமல் இருக்க நமது 100% தபால் ஓட்டுகள் தேவை..
இம்முறை நமது வாக்குரிமையை இழந்தோமானால்...
இழப்பதற்கு வேறொன்னும் இல்லா நிலையை ஆட்சியாளர்கள் விரைவில் ஏற்படுத்திவிடுவார்கள்.
கடந்த தேர்தலில் பெருவாரியான ஆசிரியர்கள் தபால் வாக்குரிமையை இழந்தது போல் இந்த முறை நடந்துவிடக் கூடாது தோழர்களே.
தேர்தல் முடிவு நம் கையில் தான் (தபால் ஓட்டை பொறுத்து) உள்ளது என்பதை மீண்டும் நிலைநாட்டுவோம்.
எனவே இன்று தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு செல்லும் ஆசிரியர்கள் தயவுசெய்து தங்களின் வாக்காளர் அடையாள அட்டை நகல், சட்டமன்ற தொகுதி, பாகம் எண், வரிசை எண் ஆகியவற்றை குறித்து எடுத்துச்செல்லவும் .
(epic)(space)(voter ID number) என type செய்து 9444 123 456 என்ற எண்ணிற்கு SMS அனுப்பவும் உடனே உங்கள் தொகுதி எண், பாகம் எண், வரிசை எண் ஆவகியவற்றை தமிழிலும் ஆங்கிலத்திலும் இலவசமாக பெறலாம்.
நமது வாக்குகள் நமக்கே வாய்க்கரிசிகளாய் மாறிவிடக்கூடாது தோழர்களே
நம் பலத்தை மறந்த (குறைத்து எடை போட்ட) ஆட்சியாளர்களுக்கு இனி என்றும் மறவாத படி செய்திடுவோம்..
இதை மற்ற குழுவிலும் பகிர்ந்து ஆசிரியர்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்த உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
-இவண்
தேவராஜன்,